search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலையில்லா சைக்கிள்கள்"

    • 1,508 மாணவிகளுக்கு ரூ.73 லட்சத்து 9 ஆயிரத்து 680 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • முதல் மதிப்பெண் பெற்ற 10 மாணவ மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டி. மதியழகன், ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அமைச்சர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்-அமைச்சர், ரூ.37 ஆயிரம் கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது மாவட்டத்தில் உள்ள 111 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 14,216 பேருக்கு ரூ.6 கோடியே 85 லட்சத்து 36 ஆயிரத்து 860 மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 1,508 மாணவிகளுக்கு ரூ.73 லட்சத்து 9 ஆயிரத்து 680 மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் கல்வி கற்க நல்ல சூழ்நிலை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக, கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-ம் கல்வியாண்டில் படித்து அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள 3 மாணவிகளுக்கும், 10-ம் மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற 7 மாணவ மாணவிகள் என மொத்தம் 10 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய குழு தலைவர் சரோஜினி பரசுராமன், நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேல்நிலை கல்வியை தடையில்லாமல் படிக்க சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.
    • செந்திகுமார நாடார் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 131 மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் களை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    கிராமப்புரங்களில் ஏழ்மையில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய பிள்ளைகளை பல்வேறு குடும்ப சூழ்நிலையின் காரணமாக 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்டு மேல்நிலைக்கல்வி தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

    அனைத்து தரப்பு மாண வர்களும் மேல்நிலைக் கல்வியை தடைபெறாமல் கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு இந்த விலையில்லா சைக்கிள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 2023-24ம் நிதியாண்டில் 7 ஆயிரத்து 699 மாணவர்களுக்கும், 9 ஆயிரத்து 982 மாணவிக ளுக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

    முதற்கட்டமாக மல்லாங்கிணர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 161 மாணவர்களுக்கும், செந்திகுமார நாடார் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 131 மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (பொ) முத்துக்கழுவன், மல்லாங்கி ணர் பேரூராட்சி தலை வர்கள் துளசிதாஸ், செந்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்க தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 63 மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலைப் பிரிவில் கடந்த ஆண்டு முதலாமாண்டு படித்த 4 ஆயிரத்து 168 மாணவர்கள், 5 ஆயிரத்து 517 மாணவிகளுக்கு என மொத்தம் 9ஆயிரத்து 685 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 66 லட்சத்து 84 ஆயிரத்து 120 மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.

    இதில் ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மட்டும் 16 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 2ஆயிரத்து 609 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சத்து 76 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பிலான சைக்கிள்கள் வழங்கப்படுகிறது.

    விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ,முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் உள்பட நகரமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி நன்றி கூறினார்.

    • எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.
    • இந்த வயது என்பது உங்களுக்கு மிக முக்கியமான வயதாகும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கல்வித்துறை சார்பில் தென்காசி மாவட் டத்தில் 53 அரசு பள்ளிகள், 43 அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 13,053 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    கலெக்டர்

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், சங்கரன் கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன், யூனியன் துணை சேர்மன் செல்வி, நகராட்சி கவுன்சி லர் உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத ன்மை கல்வி அலுவலர் முத்தையா வரவேற்று பேசினார்.

    தொடர்ந்து தனுஷ்குமார் எம்.பி., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விலையில்லா சைக்கிள்

    இதில் சிறப்பு அழைப்பாள ராக தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். விலையில்லா சைக்கிள், பள்ளி சீருடை, மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வருகின்றார்.

    பல்வேறு திட்டங்கள்

    மாணவ, மாணவிகள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த வயது என்பது உங்களுக்கு மிக முக்கியமான வயதாகும். இந்த வயதில் கல்வி உள்ளி ட்ட அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல தொரு இடத்தை அடைய வேண்டும்.

    திராவிடம் என்பது சுயமரியாதையை கற்று கொடுத்த இயக்கம். சுய மரியாதை என்பது ஆண்களும்- பெண்களும் சமம் என உணர்த்திய இயக்க மாகும். முதல்-அமைச்சர் மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அயராது உழைத்து வருகின்றார். அவற்றை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், யூ.எஸ்.டி. சீனிவாசன், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சவுந்தர பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் பத்ம நாதன், மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட அணி அமைப்பா ளர்கள் கே.எஸ்.எஸ். மாரி யப்பன், முகேஷ், குருவசந்த், அப்பாஸ்அலி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், கார்த்தி, ராஜராஜன், வீரமணி, ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    • சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. 215 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
    • உடலும் உள்ளமும் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நன்றாக படிக்க முடியும்.

    சிவகிரி:

    சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

    பள்ளியின் செயலாளர் தங்கேஸ்வரன், மகாஜன சங்கத்தின் துணைத்தலைவர் மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளியின் தலைமையாசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார். சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 215 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

    உடலும் உள்ளமும் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நன்றாக படிக்க முடியும். மாணவர்கள் நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளிக்குள் வந்து செல்ல வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் சைக்கிள் வழங்கப்படுகிறது. இதனை மாணவ- மாணவிகள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். வளரும் மாணவ- மாணவியர்கள் சுயநலம் இல்லாமல் பொது நலத்தோடு, தனிமனித ஒழுக்கத்தோடு நாட்டுக்காக உழைக்க வேண்டும். மன்னர் கலிபா போல் நீதியுடனும், நியாயத்துடனும் மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.இப்பகுதி மக்கள் அளித்த கோரிக்கையான அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மட்டும்தான் மாதந்தோறும் உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

    அதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் அரசு உதவித்தொகை கிடைக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை சட்டசபையில் பேசியும், தமிழக முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறியும் வெற்றி பெறுவதற்கு முயற்சி எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பேரூராட்சி மன்றத்தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமி ராமன், சிவகிரி நகர தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், புளியங்குடி நகர செயலாளர் ஜாகிர் உசேன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன், வாசுதேவநல்லூர் மாரிச்சாமி, அ.தி.மு.க. செயலாளர் காசிராஜன்,

    வார்டு உறுப்பினர்கள் சித்ராதேவி, செந்தில்வேல், அருணாசலம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரேவதி, மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். உதவி தலைமையாசிரியை சுப்புலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.

    • தாகம் தீர்த்தபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மாணவ மாணவிகள் 64 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை சின்னசேலம் யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள தாகம் தீர்த்தபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மாணவ மாணவிகள் 64 பேருக்கு ள்களை சின்னசேலம் யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி வழங்கினார். இதில் தலைமை ஆசிரியர் இளமுருகன், மாவட்ட கவுன்சிலர் கலையரசி சந்திரசேகர், ஆசிரியர் குழு தலைவர் ஆறுமுகம், பாபு, ஆதி மூலம், ரமேஷ், வெங்கடேஷ், மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நல்லமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
    • 85 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே தோட்டனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட நல்லமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.அதனைத் தொடர்ந்து அவர் 12-ம் வகுப்பு படிக்கும் 85 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பாக்கிய செல்வம், சாணார்பட்டி ஒன்றிய தெற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன், திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றிய குழு தலைவர் ராஜா, நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்ஷா, தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இலவச சைக்கிள் வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளது.
    • தலைமை ஆசிரியர் தெரேசால், கணேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் களை வழங்கும் நிகழ்ச்சியினை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

    இதனையொட்டி தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 முடித்த 698 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்காக தயார் நிலையில் உள்ளது. இதனைதலைமை ஆசிரியர் தெரேசால், கணேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    • அமைச்சர் கீதாஜீவன் 62 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
    • எல்லா திட்டங்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி போல்பேட்டை பகுதியிலுள்ள தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

    சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 62 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசியதாவது:-

    மக்களுக்கான ஆட்சி தி.மு.க. மட்டும் தான். எல்லா திட்டங்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பார்கள். உங்களுடைய பெற்றோர்கள் தெய்வமாக இருப்பதை போல் வாழ்க்கை தரம் உயர்வதற்கு மெழுகுவர்த்தியை போல் தன்னை உருக்கி கொண்டு நல்ல அறிவுரை வழங்கி உங்கள் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி கொடுக்கும் ஆசிரியர்களும் அதற்கு சமமானவர்கள். ஆரம்ப கல்வி முதல் கல்லூரி படிப்பு வரை அரசு பல்வேறு உதவிகளை உங்களுக்கு செய்து கொடுக்கிறது.

    இதன் மூலம் நன்றாக படித்து இந்த நாட்டின் பெருமையை வெளி உலகத்திற்கு நீங்கள் எடுத்துச்சென்று தாய் தந்தையர்களை மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டும். நான் படித்த காலத்தில் இது போன்ற வசதி வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. இப்போது உள்ள மாணவ-மாணவிகள் எல்லா வகையிலும் கொடுத்து வைத்தவர்கள் இதைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் சுரேஷ்குமார், மற்றும் அல்பட், பாஸ்கர், ஆசிரியர்கள், மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    ×